Posts

Showing posts from July, 2009

இந்தியாவின் சோகம் வறுமையல்ல. வறுமையை ஏற்றுச் சகித்துக்கொண்டு வாழும் ஏழை மக்களே!!!

உலகில் நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்தே ஏழ்மை ஒரு விவாதப் பொருளாக உள்ளது. கி.மு. 5-ம் நூற்றாண்டில் ப்ளாட்டோ ""அதிகமான ஏழ்மையும், அதிகமான பணபலமும் மக்களிடம் காணப்பட்டால் அது தீங்கு விளைவிக்கும்'' என்றார். ""ஏற்கெனவே வசதி படைத்தவர்கள் மேலும் வசதியைப் பெருக்கிக் கொள்வதை முன்னேற்றம் எனக் கருத முடியாது. வசதியில்லாதவர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதே முன்னேற்றம்'' என 1937-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் கூறினார். ஏழைகளின் வாழ்க்கைத் தரம் பற்றி பேசாத தலைவர்களே கிடையாது என்றபோதிலும் ஏழ்மை என்றால் என்ன என்பதை வரையறுப்பது மிக முக்கியமான ஒரு கடமையாகிறது. காரணம், இந்தியா போன்ற ஒரு நாட்டில் பல லட்சம் கோடி ரூபாய்கள் ஏழ்மை மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்குச் செலவிடப்படுகிற காரணத்தால் அவை சரியானவர்களுக்குத்தான் போய்ச் சேருகின்றனவா எனும் கேள்வி எழுகிறது. அதனால்தான் ஏழ்மை என்றால் என்ன, ஏழைகள் யார் எனும் கேள்வி மிக முக்கியமானது ஆகிறது. ஏழ்மை பற்றி உலக அறிஞர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் ஆராய்ச்சியை 1901-ம் ஆண்டு சீபாம் ரவுண்டிரி எனும்...

புற்றுநோயைத் தவிர்க்க முடியுமா?

ஆறிப் போன காபி, தேநீர் போன்றவற்றை மீண்டும் சுட வைத்துக் குடிப்பது, சூடான நீரை பாலிதீன் கவர்களில் ஊற்றிக் குலுக்கிப் பாலுடன் கலப்பது, உலோகப் பாத்திரத்தை அடுப்பிலேற்றி சூடாக்குவது, ரப்பர், டயர், பிளாஸ்டிக் ஆகியவற்றைக் கொளுத்துவது, ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் வாழ்வது போன்றவை புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை என்று அறுதியிட்டுச் சொல்கிறார்கள், நவீன ஆராய்ச்சியாளர்கள். அதே போல புராதன ஆயுர்வேத நூல்களில் புற்றுநோய்க்கான காரணிகள் பட்டியலிடப்பட்டுள்ளனவா? அஷ்டாங்க சங்கிரகம் எனும் ஆயுர்வேத நூல் மட்டமான உணவுவகைகளைப் பட்டியலிடும்போது "உஷ்ணீ க்ருதம் புன:' என்று நடுவில் குறிப்பிடுகிறது. அதாவது எந்த ஓர் உணவுப் பண்டத்தையும் மறுபடியும் சூடு செய்வது, மட்டமான உணவாகும் என்று அதற்கு அர்த்தமாகும். உணவைச் சமைத்த ஒன்றரை மணி நேரத்திற்குள் அதன் சூடு சுமாரான நிலையில் இருக்கும்போதே, உண்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எத்தனை பேருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறதோ? உணவைச் சீரணிக்கச் செய்பவை ஆறு: 1. ஊஷ்மா - உடற்சூடு, 2. வாயு - வாதம், 3. க்லேதம் - பிசுபிசுப்பு - நீர்ப்பதம் - ஈரப்பசை, 4. ஸ்நேகம் - எண்ணெய்ப்பசை, 5. ...

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை?

சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸýடன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும். உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும். அவர் ஒரு குளோப் ஜாமூன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 300 மி.கிராமாக உயரும். ஆனால் அவரே குளோப் ஜாமூனுக்குப் பதில் 100 கிராம் கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட்டால் 40 மி.கி. தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும். சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது. பானங்கள் (200 மி.லி அளவு)...